search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண் பலி"

    • டீ போடுவதற்காக பிரிட்ஜில் இருந்து பால்பாக்கெட்டை எடுத்துள்ளார்.
    • எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து வாணி தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தார்.

    ராஜபாளையம்:

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள வரகுணராமபுரம் பகுதியில் நேற்று இரவு இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதன் காரணமாக அப்பகுதியில் மின்சாரம் தடைபட்டுள்ளது.

    இரவு முழுவதும் மின்சாரம் தடைபட்ட நிலையில் இன்று அதிகாலை 4 மணி அளவில் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் வரகுணராமபுரத்தை சேர்ந்த கட்டிடத் தொழிலாளி மாரிமுத்துவின் வீட்டில் அவரது மனைவி வாணி வழக்கம்போல் காலையில் எழுந்தார்.

    பின்னர் டீ போடுவதற்காக பிரிட்ஜில் இருந்து பால்பாக்கெட்டை எடுத்துள்ளார். அப்பொழுது எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து வாணி தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தார். உடனடியாக கணவர் மாரிமுத்து மற்றும் உறவினர்கள் ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்தபோது வழியிலேயே உயிரிழந்தார்.

    இந்த விபத்து குறித்து கீழராஜகுலராமன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    குமாரபாளையம்:

    சேலம் மாவட்டம் கருப்பூர் வெள்ளாளபட்டியைச் சேர்ந்தவர் குமார். இவர் தனது மனைவி செல்வியுடன் (36) நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள ஆலாங்காட்டுவலசுவில் தங்கி அங்குள்ள விசைத்தறி தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். நேற்று செல்வி வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக பம்பு ஸ்டவ் வெடித்தது. இதில் அருகில் இருந்த செல்வி மீது தீப்பற்றியது. உடல் முழுவதும் தீப்பற்றிய நிலையில் செல்வி கதறி துடித்தார். பலத்த தீக்காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனில்லாமல் செல்வி இறந்து போனார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • பூங்கொடி மோட்டார் சைக்கிளில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
    • இதில் அவருக்கு தலையில் அடிபட்டு படுகாயம் அடைந்தார்.

    பெருந்துறை:

    திருப்பூர் மாவட்டம் நீலகண்டபுரம் வ.உ.சி. நகர் பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ். இவரது மனைவி பூங்கொடி (வயது 55).

    இந்த நிலையில் கடந்த 12-ந் தேதி தீபாவளி அன்று ஈரோட்டில் உள்ள அவர்க ளது உறவினரை பார்ப்பத ற்காக தனது மகன் கவுதம் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார்.

    மோட்டார் சைக்கிளை கவுதம் ஓட்டி வந்தார். பூங்கொடி பின் பகுதியில் அமர்ந்து கொண்டு வந்தார்.

    இதை தொடர்ந்து அவர்கள் பெருந்துறை அடுத்த ஊத்துக்குளி- விஜயமங்கலம் ரோட்டில் அவர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தனர்.

    அப்போது பூங்கொடி எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிளில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

    இதில் அவருக்கு தலையில் அடிபட்டு படுகாயம் அடைந்தார். இதை கண்டு அவரது மகன் அதிர்ச்சி அடைந்தார்.

    இதையடுத்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    மேலும் மேல் சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • நாய் குறுக்கே வந்ததால் விபரீதம்
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    வேலூர்:

    குடியாத்தம் வீரிசெட்டி பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவருடைய மனைவி மலர் (வயது 48).

    தீபாவளி பண்டிகையை யொட்டி கே.வி.குப்பத்தை அடுத்த வடு கன்குட்டை கிராமத்தில் உள்ள மகள் வீட்டிற்கு அதிரசம், முறுக்கு, எள்வடை உள்ளிட்ட பலகாரங்களை கொடுப்பதற் காக நேற்று முன்தினம் மொபட்டில் கோவிந்தசாமி, மலர் ஆகியோர் சென்றனர்.

    சென்னங்குப்பம் அருகே உள்ள ஆலம ரம் பஸ்நிறுத்தம் பகுதியில் சென்றபோது நாய் ஒன்று தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே சென்றது. இதையடுத்து நாய் மீது மோதாமல் இருப்ப தற்காக கோவிந்தசாமி உடனடியாக பிரேக் பிடித்தார்.

    அதனால் கட்டுப்பாட்டை இழந்து மொபட் நிலைதடுமாறி சாய்ந்தது. இதில் தவறி கீழே விழுந்த கோவிந்த சாமி, மலர் ஆகியோர் படுகாயம் அடைந்தார்.

    இதைக்கண்ட பொதுமக்கள் உடனடியாக இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சிறிதுநேரத்தில் மலர் பரிதாபமாக உயிரிழந்தார். அதே மருத்துவமனையில் கோவிந்தசாமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து கே.வி.குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • சென்னை அருகே உள்ள ஒரு கோவில் திருவிழாவுக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு புறப்பட்டு சென்றனர். பின்னர் நேற்றிரவு சொந்த ஊருக்கு ஒரு சரக்கு வாகனத்தில் புறப்பட்டனர்
    • காரிப்பட்டி போலீசார் காரை பறிமுதல் செய்து அட்வின்குமாரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சேலம்:

    கோவை மாவட்டம் செம்மேடு பகுதியை சேர்ந்தவர் தேவராஜ் (45), இவரது மனைவி பத்மாவதி (40).இவர்களது மகள் மணிமேகலை (21), மகன் அருண்குமார் (19).

    இவர்கள் சென்னை அருகே உள்ள ஒரு கோவில் திருவிழாவுக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு புறப்பட்டு சென்றனர். பின்னர் நேற்றிரவு சொந்த ஊருக்கு ஒரு சரக்கு வாகனத்தில் புறப்பட்டனர்.

    அந்த வாகனத்தை கரூர் மாவட்டம் வேடிச்சம்மபாளையம் ஒத்தையூர் பகுதியை சேர்ந்த மணிவேல் என்பவர் ஓட்டினார். இன்று அதிகாலை 2 மணியளவில் காரிப்பட்டி தனியார் பால் நிறுவனம் அருகே வந்த போது பின்னால் வந்த செங்கல்பட்டை சேர்ந்த அட்வின்குமார் (49) என்பவர் ஓட்டி வந்த கார் திடீரென சரக்கு வாகனம் மீது மோதியது.

    இதில் நிலை தடுமாறிய சரக்கு வாகனம் தாறுமாறாக ஓடி சாலையோரம் கவிழ்ந்தது. இந்த விபத்தில் வாகனத்தின் பின் பகுதியில் அமர்ந்து இருந்த பத்மாவதி, தேவராஜ், டிரைவர் மணிவேல் ஆகியோர் காயம் அடைந்தனர். மற்றவர்கள் லேசான காயத்துடன் தப்பினர். தகவல் அறிந்த காரிப்பட்டி போலிசார் அங்கு விரைந்து வந்து அவர்களை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிறிது நேரத்தில் பத்மாவதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தேவராஜ் மற்றும் மணிவேலுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து விசாரித்த காரிப்பட்டி போலீசார் காரை பறிமுதல் செய்து அட்வின்குமாரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.  

    • இடிபாடுகளில் சிக்கிய லட்சுமியால் வெளியே வரமுடியவில்லை. அவர் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடினார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    செங்குன்றம்:

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று மாலை முதல் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. பின்னர் நேற்று இரவு தொடங்கிய பலத்த மழை தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த நிலையில் புழலில் மழைக்கு வீடு இடிந்து பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. புழல் அடுத்த லட்சமிபுரம், சப்தகிரி நகரை சேர்ந்தவர் முருகன். இறைச்சி கடையில் வேலைபார்த்து வருகிறார். இவரது மனைவி லட்சுமி (வயது47). நேற்று காலை வழக்கம் போல் முருகன் வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் அவரது மனைவி லட்சுமி மட்டும் தனியாக இருந்தார். இந்நிலையில் நேற்று இரவு புழல் பகுதியில் பலத்த மழை கொட்டியது. இதில் சேதம் அடைந்து இருந்த லட்சுமி வசித்த வீட்டின் மேற்பகுதி திடீரென இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் சிக்கிய லட்சுமியால் வெளியே வரமுடியவில்லை. அவர் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடினார்.

    தனி வீடு என்பதால் லட்சுமி கட்டிட இடிபாடுகளில் சிக்கி இருந்தது பக்கத்துவீட்டில் வசிப்பவர்களுக் கு தெரியவில்லை.

    இதற்கிடையே இரவு 8.30 மணியளவில் முருகன் வீட்டுக்கு திரும்பி வந்தபோது வீடு இடிந்து விழுந்ததில் மனைவி லட்சுமி சிக்கி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டார். உடனடியாக அவரை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்டு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு சிகிச்சை பலனின்றி லட்சுமி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து புழல் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • வீரம்மாளை மீட்டு செங்குன்றத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரியபாளையம்:

    பெரியபாளையம் அருகே உள்ள வாணியன் சத்திரம், அண்ணா நகர் பகுதியில் வசித்து வருவபர் சீனிவாசன். இவரது மனைவி வீரம்மாள் (வயது47). இவர்களது வீட்டில் உள்ள பிரிட்ஜில் மின்சாரம் கசிந்து இருந்தது. இதனை கவனிக்காமல் வீரம்மாள் பிரிட்ஜை திறந்தார். இதில் அவர் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசியது. சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் உயிருக்கு போராடிய வீரம்மாளை மீட்டு செங்குன்றத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து வெங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தனது மொபட்டில் கரூரில் இருந்து நாமக்கல் செல்லும் பைபாஸ் சாலையை கடக்க முயன்றார்.
    • கரூரில் இருந்து நாமக்கல் நோக்கி சென்ற கார் கலா சென்ற மொபட் மீது மோதியது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் கீரம்பூர் அருகே உள்ள ராசாம்பாளையத்தை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி கலா (வயது 55). இவர் கூலி வேலை செய்து வந்தார்.

    இவர் நேற்று மதியம் கீரம்பூரில் இருந்து குஞ்சாம்பாளையம் செல்வதற்காக தனது மொபட்டில் கரூரில் இருந்து நாமக்கல் செல்லும் பைபாஸ் சாலையை கடக்க முயன்றார். அப்போது கரூரில் இருந்து நாமக்கல் நோக்கி சென்ற கார் கலா சென்ற மொபட் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய கலாவை அவ்வழியாக வந்தவர்கள் காப்பாற்றி நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    ஆனால் அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் கலா வரும் வழியில் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இந்த விபத்து பற்றி பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கிழக்கு கடற்கரை சாலையில் காரில் சென்று கொண்டு இருந்தனர்.
    • கார் எதிர்பாராத விதமாக பாலத்தில் மோதி கார் கவிழ்ந்தது.

    பேராவூரணி:

    மதுரை பழைய குயவர் பாளையம் பகுதியைச் சேர்ந்த அந்தோணி ராஜன் (வயது 50), இவரது மனைவி சகாயராணி (45), மகன் ஜெரோம் (15), மாமியார் சூசைமேரி(65) ஆகியோருடன் வேளாங்கண்ணி சென்று பேராலயத்தில் சாமி கும்பிட்டு விட்டு திரும்பி மதுரைக்கு செல்வதற்காக கிழக்கு கடற்கரை சாலையில் காரில் சென்று கொண்டு இருந்தார்.

    காரை அந்தோணி ராஜன் ஓட்டினார்.

    தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே சேதுபாவாசத்திரம் பிள்ளையார்திடல் சோதனை சாவடி அருகே சென்ற போது கார் எதிர்பாராத விதமாக பாலத்தில் மோதி கார் கவிழ்ந்தது.

    இதில் காரில் பயணம் செய்த 4 பேரும் காயம் அடைந்தனர்.

    பலத்த காயமடைந்த சூசைமேரி தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இந்த விபத்து குறித்து சேதுபாவாசத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பரமத்தி வேலூர்- மோகனூர் செல்லும் சாலையில் உள்ள குப்பிச்சிபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் உள்ளது.
    • சாலை ஓரத்தில் 50 வயது மதியத்தக்க பெண் ஒருவர் வாகனம் மோதி படுகாயம் அடைந்த நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர்- மோகனூர் செல்லும் சாலையில் உள்ள குப்பிச்சிபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலத்தில் உள்ள தார் சாலை ஓரத்தில் 50 வயது மதியத்தக்க பெண் ஒருவர் வாகனம் மோதி படுகாயம் அடைந்த நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து பரமத்தி வேலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் இந்திராணி தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று அந்த பெண்ணை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த பெண் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? எதற்காக இங்கு வந்தார்? என்பது குறித்தும், விபத்து ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வலது கால் பாதத்தின் மேல் அடையாளம் தெரியாத விஷப்பூச்சி கடித்து உள்ளது.
    • வெண்ணிலா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    ஈரோடு, அக். 17-

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த இக்கரை நிகமம் புதூர் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் பொன்னுசாமி. லோடு வாகன டிரைவர். இவரது மனைவி வெண்ணிலா (38). விவசாய கூலி தொழிலாளி. இவர்களுக்கு திருமணம் ஆகி 2 மகன்கள் உள்ளனர்.

    இந்நிலையில் சம்பவ த்தன்று புது வடவள்ளி பட்டவர்த்தி அய்யம்பாளையத்தில் உள்ள ஒரு தோட்டத்தில் தட்டி அறுக்கும் வேலையில் வெண்ணிலா ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அவரது வலது கால் பாதத்தின் மேல் அடையாளம் தெரியாத விஷப்பூச்சி கடித்து உள்ளது.

    உடனடியாக அவரை மீட்டு சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சை க்காக அழைத்து சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த வெண்ணிலா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தூத்துக்குடியில் உள்ள பெற்ரோர் வீட்டிற்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்றார்.
    • திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர இரும்பு தடுப்பில் மோதியது.

    உடுமலை : 

    திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் உள்ள வள்ளியம்மாள் கோவில் தெருவை சேர்ந்தவர் கன்னியப்பன் மகன் மோகன்ராஜ்( 28 ). தூய்மை பணியாளர் இவரது மனைவி தூத்துக்குடி தாளமுத்து நகரை சேர்ந்த இந்திரா (21). இவர்களுக்கு நான்கு வயதில் மகன் உள்ளார். இந்திரா மீண்டும் கர்ப்பம் தரித்திருந்த நிலையில் பிரசவத்திற்காக தூத்துக்குடியில் உள்ள பெற்ரோர் வீட்டிற்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்றார். மூன்று மாதங்களுக்கு முன்பு இந்திராவுக்கு பெண் குழந்தை பிறந்தது. மனைவி மற்றும் மகளை ஊருக்கு அழைத்து வருவதற்காக மோகன்ராஜ் தூத்துக்குடிக்கு காரில் சென்றார். அங்கிருந்து அதிகாலை உடுமலைப்பேட்டைக்கு காரில் புறப்பட்டு வந்தனர். காரில் மோகன்ராஜ், இந்திரா, மோகன், 3 மாத பெண் குழந்தை, இந்திராவின் தாயார் பேச்சியம்மாள்( 43), உறவினர் வன்னியராஜ் (55) ஆகியோர் இருந்தனர். பழனி உடுமலை நான்கு வழிச்சாலையில் சென்று கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர இரும்பு தடுப்பில் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த பேச்சியம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இந்திரா, வன்னியராஜ் ,மோகன்ராஜ் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். கார் டிரைவர் மற்றும் இரண்டு குழந்தைகளும் காயம் இன்றி தப்பினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சாமிநாதபுரம் போலீசார் பேச்சியம்மாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×